MOA (1)

 

 

   



வாரி மஹிம அபே உறுமய நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணையாக இஹல கனியம நீர் கட்டுப்பாட்டு கட்டமைப்பின் திறப்பு விழா கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு கே.டி. லால்காந்த அவர்களின் தலைமையில் நடைபெற்றது

WhatsApp Image 2025-11-03 at 08.30.55

'ஒரு வளமான நாடு, ஒரு அழகான வாழ்க்கை'

என்ற அரசாங்கத்தினது கொள்கையின் கீழ் செயற்படுத்தப்படும் வாரி மஹிம அபே உறுமய நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணையாக இஹல கனியாம நீர் கட்டுப்பாட்டு கட்டமைப்பின் திறப்பு விழா மற்றும் கல்வெட்ட கனியம பாலத்துடன் நீர் கட்டுப்பாட்டு கட்டமைப்பின் திறப்பு விழா ஆகிய திறப்பு விழாக்கள் நேற்று (2) மட்டக்களப்பு நவகிரி ஆறு பிரதேசத்தில் கமத்தொழில், கால்நடை, வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு கே.டி. லால்காந்த தலைமையில் நடைபெற்றன.

இது சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மேலதிகப் பயிர்களைப் பயிரிடுவதற்கு உதவும். மேலும் மூன்று பயிர்ச் செய்கைப் போகங்களில் பயிரிடுவதற்கான வாய்ப்பையும் வழங்கும். இது விவசாயிகளின் விஷேட கோரிக்கையாக இருந்தது. இது இரண்டு பயிர்ச் செய்கைப் போகங்களில் நெல்லைப் பயிரிடுவதற்கும், மூன்றாவது பயிர்ச் செய்கைப் போகத்தில் மற்றொரு ஊடுபயிரை வளர்ப்பதற்கும் வாய்ப்பளிக்கும். இந்த நிகழ்ச்சித் திட்டத்தை ஒரு வருடத்திற்குள் நிறைவு செய்து பொதுமக்களுக்கு கிடைக்கச்செய்தமைக்காக தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களிடமிருந்து பெரும் பாராட்டு கிடைத்தது. விவசாயிகளை வறுமையிலிருந்து விடுவிக்கும் இலக்கை அடைய இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என பலரும் நம்பினார்கள். 45 மில்லியன் ரூபா செலவில் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு அமைச்சர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

"மக்களுக்கு உணவு வழங்குவதற்கு கமத்தொழில் அமைச்சு பொறுப்பு. இதை நாம் சரியாகச் செய்ய முடியாவிட்டால், வெளிநாடுகளில் இருந்து உணவு மற்றும் பானங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். வசந்த சமரசிங்க அவர்கள் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர். ஜனாதிபதி எங்கள் இருவரையும் தலைவர்களாக ஆக்கியுள்ளார். மேலும் எமது நிறுவனங்களுக்கு உத்தியோகத்தர்களையும் அதிகமாக பெற்றுத் தந்துள்ளார். எங்களுக்கு ஒரு குழு உள்ளது. நாங்கள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு தடவை கூடுகின்றோம். அந்தக் குழுவின் பொறுப்பு உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வதாகும். அங்கு அரிசி, காய்கறிகள், பால் மற்றும் முட்டை உற்பத்தி பற்றி நாங்கள் பேசுகின்றோம். எமது உற்பத்தி போதுமானதாக இல்லாவிட்டால், இந்த அளவு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும் என நாங்கள் முடிவு செய்கின்றோம். நாங்கள் அந்த முடிவை எடுத்து அமைச்சரவையில் முன்வைக்கின்றோம்.

இந்தப் பகுதி முக்கியமாக நெற் பயிர் செய்கைக்கு பயன்படுத்தப்படுகின்றது. எமது நாட்டில் நெல் பயிரிடப்படும் வயல் நிலத்தின் அளவு மிக விசாலமானது. இப்போது தேவைப்படுவது எமது நெல் வயல்களின் விளைச்சலை அதிகரிப்பதாகும். அதற்காக, இந்த மாதம் ஒரு புதிய நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். எங்களுக்கு ஒரு நீண்ட கால இலக்கு உள்ளது. 2028 ஆம் ஆண்டுக்குள், எமது நாட்டின் உணவு மற்றும் பானத் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்வோம். குறிப்பாக, வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதை நிறுத்துவோம். இந்த நாட்களில், நாங்கள் ஒரு குறிப்பிட்ட வகை அரிசியைப் பயன்படுத்துகின்றோம். அது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. ஹோட்டல்களுக்கும் மற்றும் திருவிழாக்களுக்கும் தேவையான கீரி சம்பாவை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இதற்குக் காரணம், எமது விவசாயிகள் போதுமான அளவு கீரி சம்பாவை பயிரிடுவதில்லை. தேவையான அளவு கீரி சம்பாவை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. முடிந்தால், இந்தப் பகுதியில் அதிக கீரி சம்பாவை பயிரிடுவதற்கு முயற்சியுங்கள். ஒரு ஏக்கரில் இருந்து கீரி சம்பாவின் விளைச்சல் நாட்டிலுள்ளதை விடக் குறைவு. அங்குதான் பிரச்சினை இருக்கிறது. ஆனால் அதற்கு அதிக விலை கிடைக்கின்றது. எமது அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் தேவைக்கேற்ப பயிரிடுவது அவசியம். அதை வழக்கமாக பயிரிடுவது இப்போது போதாது."

ஒரு சமூகமாக மகிழ்ச்சியாக வாழ, நாம் பல அம்சங்களை நன்கு அபிவிருத்தி வேண்டும். ஒன்று நம் நாட்டின் அரசியல். இப்போது நாம் அதைச் செய்கின்றோம். இலங்கையில் முதல் முறையாக, திருட்டு, ஊழல், மோசடி மற்றும் வீண்விரயம் இல்லாத அரசியலை நாம் கட்டியெழுப்பியுள்ளோம். அடுத்து, பொருளாதாரம் இருந்த இடத்திலிருந்து எமது பொருளாதாரத்தை நிர்வகிக்கின்றோம். ஒரு பெரிய பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்பிவிட்டோம் என்று சொல்லவில்லை. மூன்றாவது அம்சம் சமூகம். போதைப்பொருள் பிரச்சினை ஒரு சமூகப் பிரச்சினை. சமூகம் சீர்குலைந்துள்ளது. இனவெறியை நாம் எங்கும் அனுமதிப்பதில்லை. "நாங்கள் அதை எங்கு பார்த்தாலும் அடக்குகின்றோம். மத வெறியை நாங்கள் அனுமதிப்பதில்லை. போதைப்பொருள் இன்று ஒரு தொற்றுநோய். அடுத்தது கலாச்சார அம்சம். இதை நாம் சரிசெய்ய வேண்டும். இந்த ஆண்டு, மக்களுக்குத் தேவையான விடயங்களுக்கு தேவையான அடித்தளத்தை நாம் அமைத்துள்ளோம்."

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் அடங்கலாக பல உத்தியோகத்தர்கள் குழு இந்த நிகழ்வில் பங்கேற்றது.

 

WhatsApp Image 2025-11-03 at 08.30.56 

WhatsApp Image 2025-11-03 at 08.30.57 

WhatsApp Image 2025-11-03 at 08.30.58 

\WhatsApp Image 2025-11-03 at 08.30.59 

WhatsApp Image 2025-11-03 at 08.30.571 

WhatsApp Image 2025-11-03 at 08.30.572 

WhatsApp Image 2025-11-03 at 08.30.581 

WhatsApp Image 2025-11-03 at 08.30.591 

WhatsApp Image 2025-11-03 at 08.30.592 

WhatsApp Image 2025-11-03 at 08.31.00 

சமூக வலையமைப்பு

 Facebook

 

ytpngwing.com YouTube

 


                         
    கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்