தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2000 ரூபா மானியத்தை 4000 ரூபா வரை அதிகரிக்க கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு இன்று (29) தீர்மானித்துள்ளது.
தற்போது எமது நாட்டில் வருடாந்த தேயிலை உற்பத்தி 260 மில்லியன் மெற்றிக் டொன்களாக குறைந்துள்ளது. இதனை 300 மில்லியன் மெற்றிக் டொன்களாக அதிகரிக்க இலக்குக் கொள்ளப்பட்டுள்ளது.
தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2000 ரூபா மானியம் வழங்குவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், தேயிலை உற்பத்தியை அதிகரிக்க அந்த தொகை போதுமானதாக இல்லை என தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக தேயிலை உர மானியத்தை 4000 ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கமத்தொில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் திரு ஜனக தர்மகீர்த்தி அவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.
இதன்படி எதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து இந்த உர மானியம் வழங்கப்படவுள்ளது. தற்போது அரசாங்கத்தின் உரக் கூட்டுத் தாபனத்தினால் 2000 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள தேயிலை உரத்தின் விலையை மேலும் 2000 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மானியத்தின் நிமித்தம் 02 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. அந்த நிதித் தொகையை இலங்கை தேயிலை சபையினது நிதியின் ஊடாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று (29) கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.