MOA (1)

 

 

   



பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ள எந்தவொரு நாட்டிலிருந்தும் விலங்குகளை அல்லது விலங்குப் பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படமாட்டாது என கால்நடைகள் உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவிக்கின்றது

பல நாடுகளில் மீண்டும் தலைதூக்கிய ஏவியன் இன்ஃப்ளூயன்ஷா (எச்5என்1) வைரஸ் உள்நுழைவதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கால்நடைகள் உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் தன்னிடம் அடிக்கடி வினவுவதாகக் குறிப்பிட்ட அவர் பறவைக் காய்ச்சல் பதிவாகும் எந்தவொரு நாட்டிலிருந்தும் இலங்கைக்குள் எந்தவொரு விலங்கினப் பொருட்களையோ அல்லது விலங்குகளையோ இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்தார்.

அதே போல் அமெரிக்காவின் சில மாநிலங்களில் முதன்முறையாக கால்நடைகள் பறவைக் காய்ச்சல் நோயால் விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதால் இது ஒரு தீவிரமான சூழ்நிலை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அப்படியிருந்தும், நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இன்னும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆகையால் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திற் கொள்ள வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

சமூக வலையமைப்பு

 Facebook

 

ytpngwing.com YouTube

 


                         
    கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்