2022 திசம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் சனவரி மாதம் 02 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் யால தேசிய பூங்காவை பார்வையிடுவதற்கு பெருமளவிலான மக்கள் வந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (02) பிற்பகல் கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவை அவர்களை சந்தித்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.சந்தன சூரியபண்டார, மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களம் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாக குறிப்பிட்டார்.
அந்தக் காலப் பகுதியில் யால பூங்கா இதுவரையில் நேற்று (02) அதிகூடிய வருமானத்தைப் பதிவு செய்தது. நேற்றைய தினம் மட்டும் ஈட்டிய வருமானம் ரூ.11,264,179.10 ஆகும்.
2022.12.23 ஆம் திகதி 3,940,487 ரூபாவும், 24 ஆம் திகதி 4,136,654 ரூபாவும், 25 ஆம் திகதி 4,298,032 ரூபாவும், 26 ஆம் திகதி 5,011,064 ரூபாவும், 27 ஆம் திகதி 6,476,505 ரூபாவும், 28 ஆம் திகதி 8,190,277 ரூபாவும், 29 ஆம் திகதி 6,973,49 ரூபாவும், 30 ஆம் திகதி 8,056,954 ரூபாவும், 31 ஆம் திகதி 5,282,070 ரூபாவும் என வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு சனவரி மாதம் 01 ஆம் திகதி 4,708,450 ரூபாவும் மற்றும் சனவரி மாதம் 02 ஆதி ஆம் திகதி 11,264,179.10 ரூபாவும் என இது வரை யால தேசிய பூங்கா அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது.
இலங்கையின் தென் மாகாணத்திற்கு அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளதால், யால பூங்காவில் உள்ள விலங்குகளைப் பார்ப்பதற்காக அவர்களில் அதிகமானோர் தினமும் வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் அமைச்சரிடம் தெரிவித்தார்.
நேற்றைய தினம் (02) இடம்பெற்ற கலந்துரையாடலில் தேசிய பூங்காக்கள் தொடர்பில் அடுத்த பதினைந்து நாட்களில் நாட்டுக்கு தேவையான டொலர்களை பெற்றுக் கொடுக்கும் ஒரு வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.