MOA (1)

 

 

   



"பன்னாட்டு நிறுவனங்களை விடவும் கமக்காரர்களுக்கு சொந்தமான கமக்காரர் அமைப்புகள் எமக்கு தேவை" என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்கள் மக்கள் பொருளாதார மன்றத்தில் (People's Economic Forum) உரையாற்றும் போது கூற

WhatsApp Image 2025-09-27 at 08.04.50

சனச இயக்கம் இன்று (26) ஏற்பாடு செய்த மக்கள் பொருளாதார மன்றத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்கள் கலந்து கொண்டார். இந்த மன்றம் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த ஆண்டு மன்றத்தின் கருப்பொருள் நிலையான சமூகங்களை உருவாக்குதல் என்பதாகும். அந்த கருப்பொருளின் கீழ் பேராசிரியர் காமினி சேனநாயக்க தனது உரையை நிகழ்த்தினார். நிலைத்தன்மையை அடைவதற்கான தற்போதைய கருவி கூட்டுறவு ஆகும். விவசாயிகளை ஒன்றிணைத்து கூட்டுறவு விவசாய சங்கங்களை உருவாக்குவதன் மூலம் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். சமூக மூலதனம் கூட்டுறவு சங்கங்களின் அடித்தளமாகும். சமூகம் ஒன்றிணையும் இடத்தில், ஒரு பெரிய சமூக மூலதனம் உருவாகுகின்றது. தனியாக அல்ல, ஒரு நிலையான சமூகம் ஒன்றாகக் கட்டமைக்கப்பட்டால், நிலையான அபிவிருத்தியை கட்டமைக்க முடியும் என பேராசிரியர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, மன்றத்தில் உரையாற்றி, கூட்டுறவு சங்கங்களின் கருத்துக்களை பாராட்டினார்.

"பொருளாதார ஜனநாயகம் என்றால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் பொருளாதாரத்தில் ஈடுபட வேண்டும். மேலும் இதில் ஈடுபடுபவர்கள் தங்கள் நியாயமான பங்கைப் பெற வேண்டும். இவ்வளவு காலமாக எமது நாட்டில் பொருளாதார ஜனநாயகம் செயற்படுத்தப்படவில்லை. விவசாயிகள் பொருளாதாரத்தில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுக்கு நியாயமான பங்கு கிடைக்கவில்லை. பொருளாதார ஜனநாயகம் வெற்றிபெற, கூட்டுறவு சங்கங்களின் கருத்து அவசியம்.

உணவுப் பாதுகாப்புக் குழுவில் எமக்கு ஒரு சிக்கல் இருந்தது. அதுதான் பெரிய வெங்காயத்தை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் பிரச்சினை. பெரிய வெங்காயத்தை பயிரிடுவதற்கான செலவு அதிகம். ஆனால் வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலை குறைவு. பெரிய வெங்காயம் மீதான வரி ஒரு கிலோவுக்கு ரூ. 10. ஆக இருக்க வேண்டும் என விவசாயிகளிடமிருந்து ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அந்த வரியை அதிகரிக்க விவசாயிகளிடமிருந்து ஒரு கோரிக்கை இருந்தது. அதன்படி, அந்த வரியை ரூ. 50 ஆக அதிகரித்தோம். ஆனால் அது விவசாயிக்கு நல்லதல்ல. அதை சேமித்து வைத்தவர்களுக்கு நல்லது. அரசாங்கம் அதை நேரடியாக விலைக்கு ஏற்ப கொள்வனவு செய்து விவசாயிக்கு இலாபம் ஈட்ட வேண்டும் என்பதற்கான மற்றொரு கருத் திட்டம் இருந்தது. கூட்டுறவு அமைப்பு வலுப்படுத்தப்பட்டால், சலுகைகள் வழங்க விரும்புவோருக்கு சலுகைகள் வழங்கப்படலாம். கொள்வனவு வழிமுறை இல்லாததால் அது ஒரு பிரச்சினையாக இருந்தது. கூட்டுறவு அமைப்பு இருந்திருந்தால், இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கும். கூட்டுறவு செயல்முறை மூலம் தரை அடிமட்டத்திற்கு செல்லாமல் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது கடினம்.

கூட்டுறவு முறைமையை வலுப்படுத்தாமல் பொருளாதார ஜனநாயகம் வெற்றிபெற முடியாது. இது அரசாங்கத்திற்கு அவசியமானது.

தனியாக வேலை செய்வதை விடவும் ஒன்றாக வேலை செய்வதில் அதிக பலம் உள்ளது. அந்த கூட்டுத்தன்மை எமது மரபணுக்களில் உள்ளது. விவசாயிகளின் கூட்டுத்தன்மை எமக்குத் தேவை. பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பதிலாக விவசாய நிறுவனங்கள் எமக்குத் தேவை. நாம் ஒன்றாக வேலை செய்து இந்த முயற்சியை வெற்றிபெறச் செய்வோம். ”

இந்த நிகழ்வில் சனசா இயக்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.

WhatsApp Image 2025-09-27 at 08.04.51 

WhatsApp Image 2025-09-27 at 08.04.53 

WhatsApp Image 2025-09-27 at 08.04.501 

WhatsApp Image 2025-09-27 at 08.04.502 

WhatsApp Image 2025-09-27 at 08.04.531 

 

சமூக வலையமைப்பு

 Facebook

 

ytpngwing.com YouTube

 


                         
    கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்