ஜப்பானிய தூதுவர் இசோமாட்டா அகியோ (Isomata Akio) அவர்களுக்கும் மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு கே. டீ. லால்காந்த அவர்களுக்கும் இடையில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.
ஜப்பானிய அரசாங்கத்தாலும் JICA நிறுவனத்தாலும் இலங்கையில் இதுவரை செயற்படுத்தப்பட்டுள்ள கருத் திட்டங்கள், தற்போது செயற்படுத்தப்பட்டு வருகின்ற கருத் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் என்பன பற்றி அமைச்சருக்கும் தூதுவருக்கும் இடையில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதற்கு இணங்க, இலங்கையின் சந்தை தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் விவசாய உற்பத்திகளை ஊக்குவித்தல், உள்நாட்டு விவசாயத்திற்கு உரங்களையும் மற்றும் பூச்சிக்கொல்லிகளையும் சரியான மற்றும் பொருத்தமான முறையில் பயன்படுத்துவது பற்றிய தொழில் நுட்ப உதவியையும் மற்றும் ஆலோசனை உதவியையும் பெறுதல், வடகிழக்கு பிராந்தியங்களில் உள்நாட்டுத் திரவ பால் தொழிலை மேம்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனை உதவியையும் மற்றும் தொழில் நுட்ப உதவியையும் பெற்றுக் கொள்ளல் மற்றும் காட்டு விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைப்பதற்குத் தேவையான உதவியைப் பெற்றுக் கொள்ளல் என்பன தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
உள்நாட்டு விவசாயிகளை பாரம்பரிய விவசாயத்திலிருந்து புத்தாக்க விவசாயத்திற்கு மாற்றுவதற்கும், விவசாயத் துறையை விட்டு வெளியேறும் இளைஞர்களை மீண்டும் விவசாயத் துறைக்கு ஈர்ப்பதற்கும் உதவும் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது பற்றியும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையின் விவசாயத் துறையின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும், அமைச்சரின் வேண்டுகோளின்படி விவசாய நிலங்களை மேம்படுத்துவதற்கும் மற்றும் நவீனமயமாக்குவதற்கும் தேவையான திட்டங்கள் ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தூதுவர் தெரிவித்தார். ஜப்பானில் விவசாயத் துறையில் அதிக எண்ணிக்கையிலான இலங்கை இளைஞர்கள் பணியாற்றி வருவதாகவும், இந்த வாய்ப்புகளை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தூதுவர் கூறினார்.
இலங்கை மக்கள் மத்தியில் ஜப்பான் மீது மிகுந்த நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் இதன் போது தெரிவித்தார். இந்த நீண்டகால உறவையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தி ஜப்பானுடன் மிகவும் நெருக்கமான எதிர்காலத்தில் பணியாற்ற இலங்கை தயாராக இருப்பதாகவும் கூறினார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டமைக்கு அமைச்சர் தனது விஷேட நன்றியையும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஜப்பானிய தூதுவர் இசோமாட்டா அகியோ (Isomata Akio) அடங்கலாக அதிகாரிகள் குழுவும், JICA-வை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவும், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு கே.டீ. லால்காந்த அவர்களும், அமைச்சின் செயலாளர் டீ.பி. விக்ரமசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.