කෂකරම සහ වවල කරමනත අමත යශය 3

   



மிருகக் காட்சி சாலையில் உள்ள விலங்குகளின் தீனிகளுக்கும் பொருளாதார நெருக்கடியால் பிரச்சினைகள்

Agri Image2

 தெஹிவளை மிருகக் காட்சி சாலை அடங்கலாக ஏனைய மிருகக் காட்சி சாலைகளில் உள்ள விலங்குகளுக்கு நாளாந்தம் உணவுகளை வழங்க தேவையான நிதி இல்லாமை தற்பொழுது உக்கிரமடைந்துள்ளதாக மிருகக் காட்சி சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் கூறினார்கள்.

 இன்று (31) முற்பகல் வன சீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தில் இது பற்றிய ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது மிருகக் காட்சி சாலைகளின் அதிகாரிகள் தெரிவித்த விதத்தில் பார்க்கின்ற போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு, எரிபொருள் பற்றாக்குறை காரணமாக உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு, உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு முதலிய காரணங்களினால் மிருகக் காட்சி சாலைகளில் உள்ள அந்த விலங்குகள் கடும் உணவுப் பாற்றாக்குறைக்கு முகம்கொடுத்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

 மேலும் வழக்குப் பொருளாக உள்ள யானைகளைப் பாதுகாக்கும் பொறுப்பும் மிருகக் காட்சி சாலைகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த யானைகளை பாதுகாப்பதற்கு வருடம் ஒன்றுக்கு 45 மில்லியன் ரூபா நிதி செலவாகுகின்றது.  

 அரசாங்கம் தனது அரவுசெலவுத்திட்ட ஆவணத்தின் மூலம் ஒதுக்கிய நிதிகள் மேற்குறித்த விடயங்களின் நிமித்தம் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

 மிருகக் காட்சி சாலைகளுக்கு உணவுப் பொருட்களை விநியோகித்த விநியோகத் தரப்புகளுக்கு இது வரை 59 மில்லியன் ரூபாவை நிலுவைப் பணமாக செலுத்த நேர்ந்துள்ளது. அதே போல் இந்த ஆண்டின் எஞ்சிய காலப் பகுதிற்கு தேவையான நிதிகள் அடங்கலாக குறைந்தளவு 120 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுகின்றது.

 இந்த விடயங்களை கருத்திற் கொண்டு அந்த நிதிகளை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு பொதுத் திறைசேரியுடன் கலந்துரையாடி, நடவடிக்கையை எடுப்பதற்கு கமத்தொழில், வன சீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்கள்.

 விலங்குகள் மீது கருனையும் மற்றும் அக்கறையும் காட்டுகின்ற மக்களின் ஒத்துழைப்பில் விலங்குகளைப் பாதுகாக்கும் நிறுவனங்களின் அர்ப்பணிப்புடைய  ஒரு முறையியலை விரைவில் தயாரிக்குமாறு அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு.

 அறிவுரை வழங்கினார். இன்று நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி மக்களை மட்டுமன்றி விலங்குகளையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்த விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கம் நடவடிக்கையை எடுக்கும் என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

 இதன் போது வன சீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திருமதி சந்திரா ஹேரத் அவர்கள் அடங்கலாக மேலும் பலர் கலந்து கொண்டனர்.

சமூக வலையமைப்பு

     கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்