கமத்தொழில் அமைச்சின் புதிய செயலாளர் திரு எம்.பீ. ரோஹன புஷ்பகுமார அவர்கள் இன்று தனது அலுவலக கடமைப் பணிகளை ஆரம்பித்தார்கள். கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் அடங்கலாக அமைச்சின் அலுவலர்களும் இதன் போது கலந்துகொண்டனர். காலி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மாவட்ட செயலாளராக பணியாற்றிய இவர் ஒரு சிரேஷ்ட நிருவாக அதிகாரியாவார்.
கொழும்பு, களணி ஆகிய பல்கலைக்கழகங்களின் பட்டதாரி அறிஞரான திரு புஷ்பகுமார அவர்கள் உதவித் தேர்தல் ஆணையாளர் ஒருவராக அரச சேவையில் 1996 ஆம் ஆண்டில் இணைந்தார். அன்றிலிருந்து இன்று வரை நிருவாக சேவையில் மதிக்கத்தக்க ஒரு அரச அதிகாரியாக தனது கடமைகளை நிறைவேற்றி, பல நிறுவனங்களில் பணிபுரிந்து அனுபவத்தை பெற்றுள்ள சிஷே்ட அரச அதிகாரி ஒருவர் ஆவார்.